/* */

வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த கலெக்டர் அமர் குஷ்வாஹா

வாணியம்பாடியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணும் மையத்தினை  மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த கலெக்டர் அமர் குஷ்வாஹா
X

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் கலெக்டர் அமர் குஷ்வாஹா

தமிழகத்தில் நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகின்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் 3 பேரூராட்சிகளில் உள்ளது ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் ஆலங்காயம், நாட்றம்பள்ளி, உதயேந்திரம் ஆகிய 3 பேரூராட்சிகளுக்கு வருகிற 19ஆம் தேதி நகரப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகின்றன.

இங்கு பதிவாக கூடிய மின்னணு வாக்கு பெட்டிகளை பாதுகாப்பாக வைக்கப்பட்டு வாக்கு என்னும் மையமாக வாணியம்பாடி அடுத்த சின்னகல்லுபள்ளி பகுதியில் உள்ள ஜெயின் மகளிர் தனியார் கல்லூரியில் வருகிற 22-ஆம் தேதி வாக்கு எண்ணப்படுகின்றன.

இந்தநிலையில் தேர்தல் பார்வையாளர் பிரதீப் குமார் மற்றும் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான அமர் குஷ்வாஹா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

மின்னணு வாக்குப் பெட்டிகள் வைக்கக்கூடிய அறை மற்றும் வாக்குகள் எண்ணக் கூடிய அறைகள் உள்ளிட்ட அமைவது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் அளித்து அதற்கான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். பாதுகாப்பு பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் உடனிருந்தனர்.

Updated On: 8 Feb 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  3. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  4. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  5. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  6. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  7. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  8. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  9. காஞ்சிபுரம்
    அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!