/* */

கல்வி உதவித்தொகையை கொரோனா நிதிக்கு அளித்த மாணவி

திருப்பத்தூரில் கல்வி உதவித்தொகையை கொரோனா நிதிக்கு அளித்த மாணவிக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!.

HIGHLIGHTS

கல்வி உதவித்தொகையை கொரோனா நிதிக்கு அளித்த மாணவி
X

கல்வி உதவித்தொகையை கொரோனா நிதிக்கு அளித்த மாணவி அனுசுயா

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் சரக பகுதிகளில் நூற்றுக்கணக்கான காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களது பிள்ளைகள் உயர்கல்விக்காக காவல்துறை சார்பில் கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை இன்று 11 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டாக்டர். விஜயகுமார் வழங்கினார்.

அப்போது தலைமை காவலர் ரமேஷ் என்பவரின் மகள் அனுசுயா என்பவருக்கு முதலிடத்தை பிடித்ததற்காக அரசு உதவித்தொகை 7,500 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார். அதனைப் பெற்றுக் கொண்ட மாணவி அனுசுயா இந்த உதவித்தொகையை கொரோனா உதவித் தொகையாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கிறேன் என்று மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கினார்.

இதனைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மாணவி அனுசுயாவை வெகுவாக பாராட்டினார்

Updated On: 19 May 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  2. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  3. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  5. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  6. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  7. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  8. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  9. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  10. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்