/* */

முருகன் வேடமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர்

மல்லப்பள்ளி ஊராட்சியில்  முருகன் வேடமிட்டு ஒவ்வொரு வீடுவீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர் மோகன்ராஜ்

HIGHLIGHTS

முருகன் வேடமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுயேட்சை வேட்பாளர்
X

முருகன் வேடமிட்டு வாக்கு சேகரித்த சுயேச்சை வேட்பாளர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதன் இறுதி கட்ட பிரசாரம் இன்று 4 மாலை 5 மணிக்குள் முடிவடைவதால், அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மல்லப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் மோகன்ராஜ் (வயது 20) இவர் இன்று தமிழர்களின் முதற்கடவுள் முருகன் போல் வேடமணிந்து மல்லப்பள்ளி ஊராட்சியில் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று பெண்கள், இளைஞர்கள், மற்றும் பெரியவர்களிடம் தான் போட்டியிடும் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பொதுமக்கள் முருகனே வந்து இந்த தேர்தலில் போட்டியிடுவதாக கூறி சுயேட்சை வேட்பாளர் மோகன்ராஜ்க்கு வாழ்த்துகள் கூறினர்.

Updated On: 4 Oct 2021 4:13 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்