/* */

ஆம்பூர் தோல் குடோனில் தீவிபத்து: தோல் பொருட்கள் எரிந்து சேதம்

ஆம்பூரில் உள்ள தோல் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்  ரூபாய் மதிப்பிலான தோல்  மற்றும் தோல் பொருட்கள் எரிந்து சேதம்

HIGHLIGHTS

ஆம்பூர் தோல் குடோனில்  தீவிபத்து:  தோல் பொருட்கள் எரிந்து சேதம்
X

தீ அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த புதுமண்டி பின்புறமுள்ள பெத்லகேம் எம்.வி.சாமி நகர் பகுதியில் ரியாஸ், சுப்பான், முருகன் கலீல், உள்ளிட்ட 7 பேர் தோல் குடோன் நடத்தி வருகின்றனர்.

ரியாஸ் என்பவர் குடோனில் இருந்து பின்புறம் பக்கத்தில் கரும்புகை சூழ்ந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மளமளவென பரவி அனைவரது குடோன் வேகமாக பரவியதால், குடோனில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தோல் மற்றும் தோல் பொருட்கள் எரிந்து சேதமானது.

மேலும் அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்து பலன் அளிக்காததால் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் 7 குடோனில் வைக்கப்பட்டிருந்த ஏற்றுமதிக்கான தோல் மற்றும் தோல் பொருட்கள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்தன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆம்பூர் நகர காவல் துறையினர், மின்கசிவு காரணமாக அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 23 Feb 2022 2:42 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  2. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  3. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  5. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  6. திருவள்ளூர்
    தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டு!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...