/* */

கோவிலுக்கு சென்ற போது கணவன் கண்முன்னே விபத்தில் மனைவி உயிரிழந்த சோகம்

ஆம்பூர் அருகே  கோவிலுக்கு சென்ற போது இருசக்கர வாகனம் மீது லாரி மோதி மனைவி பலி, கணவன் படுகாயம்

HIGHLIGHTS

கோவிலுக்கு சென்ற போது கணவன் கண்முன்னே விபத்தில் மனைவி உயிரிழந்த சோகம்
X

விபத்தில் உயிரிழந்த பெண்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் லட்சுமிநகர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தனது மனைவி நிர்மலா உடன் அண்ணாநகர் பகுதியில் உள்ள புத்துகோயிலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, ஆம்பூர் புறவழி சாலையில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு நோக்கி பார்சல் ஏற்றிசென்ற ஈச்சர்லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த நிர்மலா தலைமீது லாரி பின் சக்கரம் ஏரி தலை நசுங்கி கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்தார். காயங்களுடன் கணவர் கோவிந்தராஜ் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுதொடர்பாக ஆம்பூர் நகர போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ஆம்பூர் அருகே கோயிலுக்கு கணவன் மனைவி இருவரும் சென்ற போது கணவன் கண்முன்னே விபத்தில் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 4 Sep 2021 12:53 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  10. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!