/* */

ஆம்பூர் அருகே சரக்கு ரயில் பழுது: ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம் 

ஆம்பூர் அருகே சரக்கு ரயில் பழுதாகி நின்றதால் சென்னை பெங்களூரு மார்க்கத்தில் ரயில்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக சென்றன

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே சரக்கு ரயில் பழுது:  ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம் 
X

லோகோ பைலட் மற்றும் ரயில்வே கார்ட் ஆகியோர் ரயிலில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்ய முயற்சி செய்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ரயில் நிலையம் அருகே ரேணிகுண்டாவில் இருந்து ஜோலார்பேட்டைக்கு 65 பெட்டிகளை கொண்ட சரக்கு ரயில் ஒன்று ஸ்டீல் பொருட்களை ஏற்றிகொண்டு விண்ணமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தபோது 2 பெட்டிகள் இடையே இணைக்கப்பட்டிருந்த இணைப்பு துண்டிக்கப்பட்டதால் திடீரென ரயில் நிறுத்தப்பட்டது.

உடனடியாக ரயிலில் இருந்த லோகோ பைலட் மற்றும் ரயில்வே கார்ட் ஆகியோர் ரயிலில் ஏற்பட்டுள்ள கோளாறு சரி செய்ய முயற்சி செய்தனர்.

பின்னர் 1 மணி நேரத்திற்கு பின்பு சரிசெய்யப்பட்டு மெதுவாக விண்ணமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று சரக்கு ரயிலை நிறுத்தினர் பின்னர் ஜோலார்பேட்டையில் இருந்து வரவழைக்கப்பட்ட பொறியாளர்கள் மூலம் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் சென்னையில் பெங்களூரு மார்க்கத்தில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக சரக்கு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் காலதாமதமாக சென்றது

Updated On: 2 Aug 2021 9:52 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!