/* */

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதி 3 பேர் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு. நிச்சயதார்த்தம் முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது நடந்த சோகம்

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதி  3 பேர் உயிரிழப்பு
X

ஆம்பூர் அருகே நடந்த கார் விபத்தில் உருக்குலைந்த கார்

ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த கண்ணயர் (வயது 94), சென்னை நங்கநல்லூர் சேர்ந்த வேணுகோபால்(வயது 26) வசுந்தரா தேவி(வயது45) சந்திரமௌலி (வயது55) ஆகியோர் வேணுகோபாலுக்கு ஓசூர் பகுதியில் நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். ஆம்பூர் அருகே செங்கிலி குப்பம் பகுதியில் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் காரில் பயணித்த 4 பேர் பலத்த காயங்களுடன் காரில் சிக்கி தவித்தனர்.

உடனடியாக அப்பகுதி மக்கள் மற்றும் காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காரில் சிக்கிய 4 பேரையும் மீட்டனர். அப்போது நிகழ்விடத்திலேயே வேணுகோபால் மற்றும் கண்ணயர் இருவரும் உயிரிழந்தனர். மேலும் வசுந்தராதேவி மற்றும் சந்திரமவுலி ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை பலனின்றி வசுந்தராதேவி மருத்துவமனையில் உயிரிழந்தார். பலத்த படுகாயமடைந்த சந்திரமௌலி மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 28 Jun 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  4. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  5. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  6. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  8. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  9. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  10. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...