/* */

ஆம்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

ஆம்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் தங்க நகை 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை. ஆம்பூர் நகர போலீசார் விசாரணை

HIGHLIGHTS

ஆம்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
X

கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் சிதறி கிடக்கும் பொருட்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் பகுதியை சேர்ந்தவர் பாரூக் இவருக்கு 3 ஆண் மற்றும் 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 13 ஆம் தேதி உடல் நலக்குறைவால் பாரூக் உயிரிழந்த நிலையில் குடும்பத்தினர் அனைவரும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் மாடிப் படிக்கட்டில் உள்ள கதவு உடைக்கப்பட்டு 2 அறைகளில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த 22 சவரன் தங்க நகை 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து பாரூக்கு மனைவி அர்ஷத் பானு ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

Updated On: 22 Aug 2021 6:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  4. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  6. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  7. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  8. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  9. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  10. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்