/* */

ஆம்பூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

ஆம்பூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகைகள், ரூ 16 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை. போலீசார் விசாரணை

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
X

ஆம்பூர் அருகே பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட வீடு 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் வசித்து வருபவர் விஜய் குமார். இவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். இவருடைய மனைவி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அவரும் அருகிலுள்ள காலனி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

இன்று மாலை விஜயகுமார் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்த பொழுது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.16 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

சம்பவம் குறித்து விஜய் குமார் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆம்பூர் கிராமிய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை அடித்த சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..

Updated On: 9 Dec 2021 2:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?