/* */

காதலன் உயிரிழந்ததால் ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

ஆம்பூர் அருகே காதலன் உயிரிழந்ததால் ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தது தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறை விசாரணை

HIGHLIGHTS

காதலன் உயிரிழந்ததால் ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை
X

ஆம்பூர் தற்கொலை செய்து கொண்டவர்கள் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகள் 11ஆம் வகுப்பு மாணவி பிரியங்கா தேவி (வயது 16) இவர் இன்று காலை அதே பகுதியில் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிரியங்கா தேவி அதே பகுதியை சேர்ந்த எலெக்ட்ரிசியன் ரமணன் (வயது 21) என்பவரை ஒருவருடமாக காதலித்து வந்ததும், நேற்று செல்போனில் சண்டை போட்டு கொண்டதால் நேற்று இரவு ரமணன் அவரது வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும், அதனால், மனமுடைந்த நிலையில் இன்று காலை பிரியங்கா தேவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

இதுகுறித்து காவல்துறையினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ரமணனின் சடலத்தை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கும் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த பிரியங்கா தேவி சடலத்தை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 20 Dec 2021 1:16 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்