/* */

ஆம்பூர் அருகே லாரி மோதி தூய்மை பணியாளர் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே பணியில் இருந்த போது தூய்மை பணியாளர் மீது லாரி மோதியதில், நிகழ்விடத்திலேயே பணியாளர் உயிரிழப்பு

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே லாரி மோதி தூய்மை   பணியாளர் உயிரிழப்பு
X

விபத்தில் பலியான தூய்மை பணியாளர் கமலா

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே துத்திப்பட்டு பகுதியில் ஊராட்சி மன்ற தூய்மை பணியாளரான கமலா மற்றும் அவருடன் 3 பேர் ஊராட்சி முழுவதும் உள்ள குப்பைகளை சேகரித்து பாங்கி ஷாப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது அவ்வழியாக பெரியவரிகம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் இருந்து தோல் கழிவுகளை ஏற்றிகொண்டு ஆம்பூர் நோக்கி சென்ற லாரி திடீரென குப்பை வண்டி மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த கமலா மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதில் நிகழ்விடத்திலேயே கமலா உயிரிழந்தார்.

உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்

Updated On: 11 Oct 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!