ஆம்பூரில் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு: வாக்குப்பதிவு தாமதம்

ஆம்பூரில் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு:  வாக்குப்பதிவு தாமதம்
X

வாக்கு பதிவு இயந்திரத்தை சரி செய்யும் பணியில் தேர்தல் அலுவலர்கள் 

ஆம்பூரில் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு காரணமாக ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வாக்குப்பதிவு துவங்கியது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் மொத்தம் 25 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் 25 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 24 வது வார்டு 47 M வாக்கு மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு பிறகு வாக்கு பதிவு துவங்கியது.

அதன் பின்னர், நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் வாக்களித்தனர்.

Tags

Next Story
why is ai important to the future