/* */

ஆம்பூரில் ரயிலில் மது பாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது

ஆம்பூரில் ரயிலில் மது பாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது; 46 மதுபாட்டில்கள் பறிமுதல்

HIGHLIGHTS

ஆம்பூரில் ரயிலில் மது பாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது
X

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ரயில் மூலமாக வெளிமாநில மது பாட்டில்கள் கடத்துவது வாடிக்கையாகிவிட்டது . இந்நிலையில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன்பேரில் போலீசார் ரயிலில் சோதனை செய்தனர்.

அப்போது ஆம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிய நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது, அவர் கொண்டுவந்த பையில் வெளிமாநில 46 மதுபாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த குடியாத்தம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களையும் கைதானவரையும், வாணியம்பாடி மதுவிலக்கு போலீசாரிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து வாணியம்பாடி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 Jun 2021 4:41 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  2. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  3. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  4. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  5. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  6. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  7. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  8. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்