/* */

இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் அமைச்சர் ஏ.வ வேலு ஆய்வு

ஆம்பூர் அருகே இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் அமைச்சர் ஏ.வ வேலு  ஆய்வு
X

இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் வேலு மற்றும் கலெக்டர் அமர் குஷ்வாஹா 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் ஊராட்சியில் இலங்கைத் தமிழர் சேர்ந்த 69 குடும்பங்கள் 225 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்புகளை கட்டி தர தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்திருந்தார் இதற்காக இடங்களில் அதிகாரிகள் தேர்வு செய்து வந்த நிலையில் 69 பேருக்கும் மாற்று இடம் தருவதாக அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

இன்று அப்பகுதிக்கு ஆய்வு செய்ய வந்த அமைச்சர் எ.வ.வேலு, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் அரசு அதிகாரிகளிடம், இடத்தை மாற்றி தர வேண்டாம் இதே இடத்தை தேர்வு செய்யுமாறு இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்து கேட்டுகொண்டனர்

மனுவைப் பெற்று கொண்டு அமைச்சர் உடனடியாக இதே இடத்தில் குடியிருப்பு பகுதி கட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவுவிட்டார். பின்னர் அங்கு இருந்த இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள குழந்தைகள் படிக்க கூடிய அங்கன்வாடிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த மாணவர்களிடம் பேசினார்.

Updated On: 30 Nov 2021 2:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....