/* */

தொழிலாளருக்கு வழங்கப்பட்ட காசோலை பணமில்லாமல் திரும்பி வந்ததால் போராட்டம் 

ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு ருக்கு வழங்கப்பட்ட காசோலையில் பணமில்லாமல் திரும்பி வந்ததால் போராட்டம் 

HIGHLIGHTS

தொழிலாளருக்கு வழங்கப்பட்ட காசோலை பணமில்லாமல் திரும்பி வந்ததால் போராட்டம் 
X
காலணி தொழிற்சாலை வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

திருப்பத்தூர் மாவடடம் ஆம்பூர் அடுத்த கொமேஸ்வரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் காலணி தொழிற்சாலையில் (TAW ) 2 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இதில் 600க்கும் மேற்பட்டோரை ஆட்குறைப்பு செய்த தொழிற்சாலை நிர்வாகம் படிப்படியாக 2000 தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கியது.

இதனால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சுமார் 10 கோடி பணத்தை 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொழிலாளர்களுக்கு 2020ஆம் ஆண்டு என்று மட்டும் பதிவு செய்து தேதி குறிப்பிடாமல் காசோலை வழங்கி வங்கியில் எடுத்து கொள்ளுமாறு கூறிவிட்டு தொழிற்சாலை மூடிவிட்டனர்.

ஆனால் காசோலையில் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் மீண்டும் தொழிற்சாலை திறந்து பணிக்கு ஆட்களை சேர்ப்பதாக தொழிற்சாலை நிர்வாகம் அறிவித்ததை தொடர்ந்து தற்போது சுமார் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இன்று நிலுவையிலுள்ள தொகை வழங்குமாறு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சி தொழிலாளர் விடுதலை முன்னணி சங்கத்தினர் ஆதரவாக நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 6 Sep 2021 4:04 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...