/* */

ஆம்பூர் அருகே ஜே.சி.பி எந்திரம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து

ஆம்பூர் அருகே ஜே.சி.பி எந்திரம் ஆற்றில் கவிழ்ந்த விபத்தல் அதில் இருந்த மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே ஜே.சி.பி எந்திரம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து
X

ஆம்பூர் அருகே ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட ஜெசிபி 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நரியம்பட்டில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் மலட்டாறு ஓடுகிறது. தொடர் கன மழை காரணமாக ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் கடந்த 15 நாட்களாக தரை பாலம் முழுகி வெள்ளம் சென்று கொண்டு இருக்கின்றது. இதனால் நரியம்பட்டு குடியாத்தம் செல்லும் வாகனங்கள், பொதுமக்களுக்கு தரை பாலத்தை கடக்க போலீஸார் தடை விதித்து இருந்தனர்.

வெள்ளத்தின் காரணமாக ஆற்று படுகையில் உள்ள தென்னை மரங்கள் மற்றும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் வரப்பட்டு குப்பைகள் அனைத்தும் தரை பாலத்தில் சிக்கியதால் நீர் செல்ல தடை ஏற்பட்டது. ஆற்றில் நீர் சற்று குறைந்ததால் ஊராட்சி மன்ற சார்பில் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு பாலத்தின் மீது சிக்கி இருந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஜே.சி.பி இயந்திரம் ஆற்றின் வெள்ள நீரில் சிக்கி கவிழ்ந்து சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. அப்போது ஜே.சி.பி இயந்திர ஓட்டுனர் உட்பட மூன்று பேர் நீரில் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 23 Nov 2021 3:48 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!