/* */

ஆம்பூரில் வேன் கவிழ்ந்து விபத்து: முதியவர் உயிரிழப்பு; 15 பேர் படுகாயம்

ஆம்பூரில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது வேன் மோதியதில் உயிரழந்தார். வேனில் பயணித்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்

HIGHLIGHTS

ஆம்பூரில் வேன் கவிழ்ந்து விபத்து: முதியவர் உயிரிழப்பு; 15 பேர் படுகாயம்
X

தடுப்புகளை உடைத்து சாலையோரம் கவிழ்ந்து கிடக்கும் வேன்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை பகுதியிலிருந்து சுமார் 42 பெண் தொழிலாளர்களை ஏற்றுகொண்டு வேன் வந்து கொண்டிருந்தது. சான்றோர்குப்பம் அருகே வந்தபோது, நடந்து சென்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி 85 வயது முதியவர் அய்யாவு மீது மோதியது. பின்னர் சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் வேன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 15க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர், உடனடியாக படுகாயம் அடைந்த முதியவர் மற்றும் பெண் தொழிலாளர்களை அப்பகுதி மக்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி முதியவர் அய்யாவு உயிரிழந்தார்.

15-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 27 Sep 2021 7:20 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  8. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை