/* */

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார். 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்
X

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் 

பெங்களூரை சேர்ந்த அஷ்ரபுல்லா என்பவர் குடும்பத்துடன் சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று பின்னர் அவர்களது சொந்த ஊரான பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்த கார் மாதனூர் அடுத்த தேவிகாபுரம் என்ற இடத்தில் வந்தபோது, திடீரென எஞ்சினில் இருந்து புகை வந்தது. அதனைப் பார்த்த அஷ்ரபுல்லா (வயது 46) என்பவர் உடனடியாக காரை நிறுத்தி அனைவரையும் கீழே இறக்கி உள்ளார்.

உடனடியாக தீ மளமளவென பரவி கார் முழுவதும் எரியத் தொடங்கியது. காரில் இருந்த 2 ஆண்கள் 2 பெண்கள் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 28 Jun 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...