ஆம்பூர் அருகே மாணவியிடம் இருந்து செல்போனை திருடி சென்ற திருடர்கள்

ஆம்பூர் அருகே மாணவியிடம் இருந்து செல்போனை திருடி சென்ற திருடர்கள்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடசேரி பகுதியில் குமரேசன் என்பவர் ஆயில் கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது மகள் கௌரி (பொறியியல் கல்லூரி மாணவி) தந்தைக்கு சொந்தமான ஆயில் கடையில் அமர்ந்து செல்போனில் ஆன்லைன் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தபோது தண்ணீர் குடிப்பதற்காக பின்பக்கமாக சென்றுள்ளார்.
கண் இமைக்கும் நேரத்தில் கடைக்குள் நுழைந்த இரண்டு இளைஞர்கள், செல்போனை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை அறிந்த மாணவி கூச்சலிட்டதை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் செல்போன் கொள்ளையர்களை விரட்டிப் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து உமராபாத் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான போலீசார் பொதுமக்களிடமிருந்து செல்போன் கொள்ளையர்களை மீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் நரியம்பட்டு பகுதியை சேர்ந்த சஞ்சய் மற்றும் கடம்பூர் பகுதியை சேர்ந்த நசீர் முகமது என்பது தெரியவந்தது. தப்பியோடிய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆம்பூர் அருகே ஆன்லைன் வகுப்புக்காக செல்போன் வைத்திருந்த மாணவியிடம் இருந்து செல்போனை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu