/* */

ஆம்பூரில் வேன், கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

ஆம்பூரில் வேன், கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஆம்பூரில் வேன், கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து
X

விபத்துக்கான மாதிரி படம் 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கன்னிகாபுரம் முதல் சான்றோர்குப்பம் வரை கடந்த ஓராண்டு காலமாக தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை பெங்களூர் மற்றும் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் ஒரு வழிச்சாலையாக மாற்றியமைக்கப்பட்டு வாகனங்கள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வேலூரில் இருந்து ஆம்பூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேன் மூலம் 15க்கும் மேற்பட்டோர் வந்து கொண்டிருந்த போது, ஆம்பூர் பேருந்து நிலையம் அருகில் பெண் உட்பட இருவர் குறுக்கே வந்ததால் அவர்கள் மீது மோதாமல் இருக்க வேன் திருப்பிய போது முன்னாள் சென்ற கார் மீது மோதியதால் அடுத்தடுத்து 3 கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. வேன் மற்றும் கார்கள் கண்ணாடிகள் உடைந்தும், முன், பின் பக்கங்களில் சேதமடைந்தன.

மேலும் வேனில் பயணம் செய்தவர்கள் காயமின்றி உயிர்த்தப்பினர். விபத்து குறித்து ஆம்பூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 6 Nov 2023 10:59 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...