/* */

ஆம்பூர் அருகே பிடிபட்ட 8 அடி நீள மலைப்பாம்பு

ஆம்பூர் அருகே 8 அடி நீள மலைப்பாம்பை இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே பிடிபட்ட 8 அடி நீள மலைப்பாம்பு
X

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சியில் உள்ளது காட்டுவெங்கடாபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் விவசாயி மோகன். இவருக்கு சொந்தமான நிலமும், கோழிப்பண்ணையும் ஊரை ஒட்டி உள்ளது. மோகன் குடும்பத்தார் இன்று அவரது வீட்டை ஒட்டி உள்ள நிலத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 8 அடி நீள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கவனித்து கூச்சலிட்டுள்ளனர்.

மேலும் வாணியம்பாடி வனச்சரகர் குமாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மாதகடப்பா பகுதியில் இருந்து வனத்துறையினர் வர தாமதமானது. இதனால் விவசாயி மோகன் அதே ஊரை சேர்ந்த இளைஞர்கள் துணையுடன், பாதுகாப்பாக மலைப்பாம்பை பிடித்தனர்.

பின்னர் அங்கு வந்த வனக்காப்பாளர் தினேஷ்குமாரிடம் பிடித்த மலைப்பாம்பை ஒப்படைத்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பு அரங்கல்துருகம் அருகே உள்ள காரப்பட்டு காப்பு காட்டில் விடப்பட்டது.

Updated On: 7 Dec 2023 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...