Begin typing your search above and press return to search.
ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சி குடித்து போராட்டம்
ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் உள்ளிருப்பு போராட்டத்தில் 7வது நாளான இன்று கஞ்சி காய்ச்சி குடித்து போராட்டம்.
HIGHLIGHTS
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்காத சூழ்நிலையில் ஆலை தற்போது இந்த ஆண்டு அரவை துவங்க வேண்டியும், நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்ககோரியும், போதிய கரும்பு அறுவைக்காக உள்ள நிலையில் ஆலையை துவக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 7வது நாளாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் போராட்டத்தை கண்டுகொள்ளாத மேலாண்மை இயக்குனரை கண்டித்து கோஷங்களை எழுப்பி, கஞ்சி காய்ச்சி குடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.