/* */

துப்பாக்கி வைத்து வன விலங்குகளை வேட்டையாடிய இளைஞர் கைது.

கள்ளத்துப்பாக்கி வைத்து களவணித்தனம் செய்த இளைஞர்.

HIGHLIGHTS

துப்பாக்கி வைத்து வன விலங்குகளை வேட்டையாடிய இளைஞர் கைது.
X

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி ( கோப்புபடம்)

ஆம்பூரில் நாட்டு துப்பாக்கியை வைத்து வன விலங்குகளை வேட்டையாடிய இளைஞர் கைது செய்யப்ட்டார்.அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் மான் கொம்புகள் பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பி கொல்லை பகுதியில் இளைஞர் ஒருவர் நாட்டு துப்பாக்கியை வீட்டில் பதுக்கி வைத்து இரவு நேரங்களில் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக ஆம்பூர் நகர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

அதன்பேரில் ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் ஆய்வாளர் திருமால் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் கம்பி கொல்லை பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இளைஞர் ஒருவர் காவல்துறையினரை பார்த்து தப்பி ஓடியுள்ளார் அவரை விரட்டி சென்று பிடித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் அருகே உள்ள பலாமருத்தூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்றும் இவர் அங்கிருந்து திருமணம் செய்துகொண்டு ஆம்பூரில் உள்ள மாமியார் வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது.

பின்னர் வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் 3 மான்கொம்புகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 20 May 2021 5:18 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்