திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 16 மாணவர்கள் உக்ரைன் நாட்டிலிருந்து மீட்பு

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 16 மாணவர்கள் உக்ரைன் நாட்டிலிருந்து மீட்பு
X

கோப்பு படம் 

உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்த திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 16 மாணவர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பினர்

உக்ரைன் நாட்டில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 23 மாணவ மாணவிகள் (16 மாணவர்கள், 7 மாணவிகள்) தவித்து வந்தனர்.

இதில் வாணியம்பாடியை சேர்ந்த 2 மாணவர்களும், ஆம்பூரை சேர்ந்த ஒரு மாணவரும் திருப்பத்தூரை சேர்ந்த ஒரு மாணவரும் தங்களது வீட்டிற்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர்.

ஏனைய மாணவர்களில் ருமேனியாவில் 4 மாணவர்களும் ஸ்லோவேக்கியா நாட்டில் நான்கு மாணவர்களும் ஹங்கேரி நாட்டில் நான்கு மாணவர்களும், போலந்து நாட்டில் மூன்று மாணவர்களும் மால்டோவாவில் ஒரு மாணவரும் உக்ரைன் நாட்டில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டு உள்ளார்கள்.

2 மாணவர்கள் மட்டுமே உக்ரைன் நாட்டில் சுமி மாநிலத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள நாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து மேற்கொண்டுள்ளன.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி