அடிதடி, கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

அடிதடி, கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
X

பைல் படம்.

நெல்லையை அடுத்த தாழையூத்தில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் குற்றவாளியான மானூர் வட்டம் தாழையூத்து காமிலாநகர் பகுதியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி என்பவரின் மகன் குமார் என்ற கொக்கிகுமார் என்ற வெயில்குமார்(27) என்பவர் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்தது.

அதன்பேரில் குற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாழையூத்து காவல் ஆய்வாளர் பத்மநாப பிள்ளைக்கு அறிவுறுத்தினார், அதனடிப்படையில் குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story