/* */

சாலையில் நிர்வாணமாக திரிந்த மனநோயாளி: ஆடை அணிவித்த பெண் சமூக ஆர்வலர்

மனநலம் பாதிக்கப்பட்டு ஆடை இல்லாமல் சாலையில் சுற்றித் திரிந்தவருக்கு ஆடை அணிவித்து உணவு ஊட்டிய சமூக ஆர்வலர் நந்தினி.

HIGHLIGHTS

சாலையில் நிர்வாணமாக திரிந்த மனநோயாளி: ஆடை அணிவித்த பெண் சமூக ஆர்வலர்
X

நெல்லையில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் நிர்வாணமாக திரிந்தவருக்கு ஆடை அணிவித்து உணவு ஊட்டிய சமூக ஆர்வலர் நந்தினி.

மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் நிர்வாணமாக திரிந்தவருக்கு ஆடை அணிவித்து உணவு ஊட்டிய சமூக ஆர்வலர் நந்தினி.

திருநெல்வேலி டவுன் சொக்கட்டான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் நந்தினி. இவர் நெல்லையில் இருந்து கங்கைகொண்டான் சென்றுள்ளார். அப்போது நெல்லை- மதுரை நான்கு வழிச்சாலையில் கங்கைகொண்டன் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் உடம்பில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக வருவதை கண்டு அவர் தனது இருசக்கர வாகனத்தில் இருந்த சால்வையை எடுத்து மனநலம் பாதிக்கப்பட்டவரின் அறையில் கட்டிவிட்டார். அவருக்கு அப்பகுதியில் உள்ள கடையில் இருந்து உணவு வாங்கி ஊட்டியுள்ளார். இந்த வீடியோ வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மனிதநேயமிக்க நந்தினியின் செயல் எல்லோர் மனதிலும் வெகுவாக பதிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நந்தினி என்ற பெண் தயக்கமின்றி மனதில் எந்த பயமும் இல்லாமல் தன்னுடைய நோக்கம் உதவி என்று மட்டும் எண்ணி செயல்பட்டு வருகிறார். ஒரு பெண் மனநலம் பாதிக்கப்பட்ட ஆணுக்கு இது மாதிரியான உதவி செய்ததைக் கண்டு பொதுமக்கள் வெகுவாக அவரைப் பாராட்டி வருகின்றனர்.

Updated On: 21 Dec 2021 7:49 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  6. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  7. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  10. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி