/* */

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

சுத்தமல்லி காவல் உதவி ஆய்வாளரை ஆயுதத்தால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்

HIGHLIGHTS

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
X

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சுத்தமல்லி, பழவூர், பால்பண்ணை தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்ற படையப்பா (40). கடந்த 23.04.2022 ம் தேதி கோவில் பாதுகாப்பு பணியில் இருந்த சுத்தமல்லி காவல்நிலைய உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரேசாவை ஆயுதத்ததால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

குற்றவாளி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் கவனத்திற்கு வந்ததால், குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைத்தார்.

அதன்பேரில், ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து குற்றவாளியை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 5 May 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு