/* */

நெல்லை மண்டலம் 21வது வார்டு பகுதியில் மேயர், துணைமேயர் ஆய்வு

நெல்லை மண்டலம் வார்டு எண் 21ல் அப்துல்வகாப் எம்எல்ஏ தலைமையில், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் ஆய்வு.

HIGHLIGHTS

நெல்லை மண்டலம் 21வது வார்டு பகுதியில் மேயர், துணைமேயர் ஆய்வு
X

நெல்லை மண்டலம் வார்டு எண் 21ல் அப்துல்வகாப் எம்எல்ஏ தலைமையில், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் வார்டு எண் 21ல் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் தலைமையில், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சி, நெல்லை மண்டலம் வார்டு எண் 21ல் பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் தலைமையில், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முன்னதாக மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் பால்வண்ணநாத சுவாமி திருக்கோவில் அருகே மரக்கன்றுகளை நட்டினார்கள்.

அதனை தொடர்ந்து வினைதீர்த்த விநாயகர் கோவில் தெருவில் உள்ள வாய்க்காலினை பொதுப்பணித்துறையுடன் இணைந்து தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள். பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் அவர்களிடம் ஊர் பொதுமக்கள் கருங்காடு செல்லும் வழியில் மயானகரையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ரோட்டை அகலப்படுத்தி தார்சாலை அமைத்திடவும், சுமார் 100 நபர்கள் அமரும் வகையில் ஓய்வு அறை அமைத்திடவும், மயானக்கரை செல்லும் பாதையில் மின் விளக்கு அமைத்து சுற்றுபகுதி முழுவதும் முள்வேலி அமைத்து கதவு போடவும், தகன மேடையின் உயரத்தினை அதிகபடுத்தவும் கூடுதலாக சிறிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்திடவும், கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றிட பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர் என்.நாராயணன், உதவி ஆணையாளர் (பொ) தபைஜு, நெல்லை மண்டல தலைவர் செ.மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினர்கள் இ.ராஜேஸ்வரி, பா.மாரியப்பன், அ.ஷேக்மன்சூர், மு.சுப்பிரமணியன் அவர்கள், அல்லாபிச்சை, மற்றும் சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், இளநிலை பொறியாளர்கள் முருகன், ஐயப்பன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 May 2022 4:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’