/* */

குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம்

பிரசித்தி பெற்ற குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம்
X

குறுக்குத்துறை முருகன் கோவில் தேரோட்டம்

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றான குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது .

இக்கோவிலின் சித்திரை தேர் திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை, மாலை இரு வேளைகளிலும் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய தினம் நடைபெற்றது. முருக பெருமான் செப்பு கடையத்தில் கோவிலிலிருந்து திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து தேருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

பின்னர் பக்தர்கள் தேரை 4 ரத வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 15 April 2022 9:07 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்