நெல்லை: கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
அடிதடி, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி போன்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லை மாவட்டம், பணகுடி காவல் நிலையத்தில் அடிதடி, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டு வந்த பணகுடி தண்டையார்குளம் சுபாஷ் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரின் மகன் முருகன் என்ற குட்டமுருகன் (32) பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்தது. அதனடிப்படையில் குற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பணகுடி காவல் ஆய்வாளர் அருள் ஜார்ஜ் சகாய சாந்திக்கு அறிவுறுத்தினார்.
அதன் பேரில் குற்றவாளி முருகன் என்ற குட்ட முருகனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் 31.07.2021 இன்று குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu