/* */

நெல்லை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 20-ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

தேசிய தலைவர்களின் நினைவு சின்னங்களை மீட்டெடுத்து மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும். சிவாஜி கணேசன் நினைவு நாளில் தீர்மானம்.

HIGHLIGHTS

நெல்லை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 20-ஆவது ஆண்டு  நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
X

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று சிவாஜி நினைவு நாளில் அவரது ரசிகர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள குட்டத்தைச் சேர்ந்தவர் சிவாஜி முத்துக்குமார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர். இவர் பெருந்தலைவர் காமராஜரின் பக்தர். தமிழ்நாடு காமராஜர்- சிவாஜி பொதுநல இயக்கத்தின் தலைவராக இருக்கும் சிவாஜி முத்துக்குமார் ,மறைந்த தேசிய தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களை சிறப்பாக நடத்தி வருகிறார்.

திசையன்விளை அருகே உள்ள குட்டம் ஊராட்சி வெம்மணன்குடியில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 20 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. சிவாஜி கணேசன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, காமராஜர், சிவாஜியை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. கூட்டத்தில் பங்கேற்ற சிறுவர்கள், பெண்களுக்கு ரோஜா செடிகள் வழங்கப்பட்டது.

தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், தேசிய தலைவர்களின் நினைவு சின்னங்களை மீட்டெடுத்து மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்று அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Updated On: 21 July 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...