/* */

கூடங்குளம் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

கூடங்குளம் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு
X

கூடங்குளம் போராட்டம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, கூடங்குளம் அணு உலை பணிகளுக்கான தேர்வு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், இன்னும் பத்து தினங்களுக்குள், மாவட்ட ஆட்சியர் மற்றும் சபாநாயகர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.

Updated On: 20 Dec 2021 9:45 AM GMT

Related News