/* */

பணகுடி பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றின் வேகம் மிக அதிகமாக காணப்படும்.

HIGHLIGHTS

பணகுடி பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
X

பணகுடி, காவல்கிணறு, கூடன்குளம், கூத்தங்குழி, செட்டிக்குளம், அம்பலவாணபுரம் மற்றும் ஆவரைக்குளம் பகுதிகளில் சுமார் 3,500க்கும் மேற்பட்ட தனியார் காற்றாலைகள் நிறுவப்பட்டு அதன் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றின் வேகம் மிக அதிகமாக காணப்படும். இதுபோன்ற, சீசன் காலங்களில் மட்டுமே காற்றாலைகள் மூலம் 3,000க்கும் மேற்பட்ட மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக பணகுடி பகுதிகளில் காற்றின் வேகம் மிக அதிகளவில் இருந்தது.

இதனால் அப்பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள கற்றாலைகளிலிருந்து அதிக அளவான சராசரியாக 3,418 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் சாதனையாக கருதப்படுகிறது.

Updated On: 30 Sep 2021 3:56 AM GMT

Related News