/* */

போலி ஆவணம் மூலம் அடிக்கடி வெளிநாடு சென்று வந்தவர் கைது

உவரி காவல்நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்று வந்த நபர் கைது.

HIGHLIGHTS

போலி ஆவணம் மூலம் அடிக்கடி வெளிநாடு சென்று  வந்தவர்  கைது
X

பைல் படம் 

போலி பாஸ்போர்ட் மூலம் அடிக்கடி வெளிநாட்டிற்கு சென்று வந்தவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம், உவரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரதர் உவரி ராஜா தெருவை சேர்ந்த சுரேஷ் சிங்(50) என்பவர் மீது உவரி காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக சுரேஷ் சிங் பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது‌. இதையடுத்து உவரி காவல் துறையினர், சுரேஷ் சிங் நடவடிக்கையை தணிக்கை செய்த போது, அடிக்கடி வெளிநாட்டிற்கு சென்று வந்தது தெரிந்தது. இதுகுறித்து , உவரி காவல் ஆய்வாளர் செல்வி விசாரணை மேற்கொண்டபோது, சுரேஷ் சிங், நெய்க்குப்பை பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்ற பெயரில் அடிக்கடி வெளிநாட்டிற்கு சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, சட்ட விரோதமாக போலி ஆவணம் மூலம், வெளிநாடு சென்று வந்த சுரேஷ்சிங்கை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

Updated On: 26 Aug 2021 6:19 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!