/* */

பொதுமக்கள் வணிகப்பகுதிகளில் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் - நெல்லை மாநகராட்சி ஆணையாளர்

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் “கொரோனா” பரவல் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. நாளொன்றுக்கு ஒற்றைப்பட இலக்கத்தில்தான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உள்ளது.

HIGHLIGHTS

பொதுமக்கள் வணிகப்பகுதிகளில் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் - நெல்லை மாநகராட்சி ஆணையாளர்
X

நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்ணு சந்திரன்

 

திருநெல்வேலி மாநகராட்சி பொதுமக்கள் வணிகப்பகுதிகளில் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றுகின்றார்களா, என்பதும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் "கொரோனா" பரவல் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. நாளொன்றுக்கு ஒற்றைப்பட இலக்கத்தில்தான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உள்ளது. இந்த நோய் பரவலானது சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், தெர்மல் ஸ்கேன் பரிசோதனை, சளி பரிசோதனை, காய்ச்சல் முகாம்கள் ஆகியவற்றின் மூலம் கண்டறியப்பட்டு, வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது அண்டை மாவட்டங்களில் டெல்டா பிளஸ் கொரோனா நோய் பரவல் ஏற்பட்டுள்ளதால், பொது மக்கள் வணிகப்பகுதிகளில் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, வணிக வளாகங்களுக்குச் செல்லும் போதும், பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸிகளில் செல்லும்போதும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். காய்ச்சல், சளி, இருமல், தும்மல் உள்ளவர்கள் கடைகளுக்கோ, வணிக வீதிகளுக்கோ செல்லக்கூடாது.

பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம் கை கழுவும் வசதியை வணிக நிறுவனங்கள் வைத்திருக்க வேண்டும். வயோதிகர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், நோயாளிகள் கடை வீதிகளுக்கு செல்வதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதே போன்று வணிக நிறுவனங்கள் அரசாங்கத்தால் கூறப்பட்டுள்ள கோவிட் 19 தடுப்பு பற்றிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

வாடிக்கையாளர்களுக்கு கை கழுவும் வசதி, கை சுத்தம் செய்யும் திரவ வசதி, உடல் வெப்ப பரிசோதனை வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.தங்கள் நிறுவனம்ஃகடையில் பணிபுரியும் பணியாளர்கள், சேல்ஸ்மேன், சிப்பந்திகள் ஆகியோர் முகக்கவசம் அணிந்து பணியிலிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதே போன்று வாடிக்கையாளர்கள் கூட்ட நெரிசல் அறவே தவிர்க்கப்பட வேண்டும். வியாபாரத்தின் போது கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மேலே குறிப்பிட்டகொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாதது அறியப்பட்டால், எவ்வித பாராபட்சமுமின்றி சம்பந்தப்பட்ட கடைஃவணிக நிறுவனம் முன்னறிவிப்பு இன்றி 10 நாட்களுக்கு அடைக்கப்படும்.

அதன் பின்பும் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை மீறினால், கொரோனா வைரஸ் தொற்று முழுவதுமாக அகலும் வரை கடை அடைக்கப்படும். மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அபராதம் விதித்தல் போன்ற சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர்களை உள்ளடக்கிய 9 சிறப்புக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் கடைபிடிக்கவேண்டும்.

அதனை மீறுபவர்கள் மீது கீழ்க்கண்ட பிரிவுகளின் கீழ் பிரிவு 57-60 பேரிடர் மேலாண்மை விதி 2005, பிரிவு 76(2) தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, வழக்கு பதிவு செய்தல் போன்ற சட்டநடவடிக்கைகள்-பிரிவு 188(IPC), உள்துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை எண் 40-3/2020-DM-I(A) dated 20th July-ன்படி படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே, மாநகராட்சி மேற்கொள்ளும் அனைத்து நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Updated On: 30 Jun 2021 1:52 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?