/* */

நெல்லையில் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு

வரும் 13ஆம் தேதி பள்ளி துவங்க உள்ள நிலையில், மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களின் 16 பாதுகாப்பு அம்சங்கள் குறித்த சோதனை.

HIGHLIGHTS

நெல்லையில் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு
X

திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் அதிகாரிகள் குழுவினர் பள்ளி வாகனங்களில் சோதனை செய்தனர்.

2022-23 கல்வி ஆண்டு வரும் 13ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களின் 16 பாதுகாப்பு அம்சங்கள் குறித்த சோதனை திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

2022-23 கல்வி ஆண்டு வரும் 13ஆம் தேதி துவங்குகிறது. அதற்கான முன்னேற்பாடாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பாதுகாப்பு குறித்த சோதனை ஆண்டுதோறும் நடைபெற்று வரும். இந்த கல்வி ஆண்டு வரும் 13ஆம் தேதி துவங்க உள்ள நிலையில், திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டது. காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத் துறை ஆகிய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பள்ளி வாகனங்களில் சோதனை செய்தனர்.

குறிப்பாக அவசர வழி முதலுதவி சிகிச்சை உபகரணம் வாகனங்களின் படிகட்டுகள் தீயணைப்பு உபகரணங்கள் வாகனங்களில் அடித்தளம் உள்ளிட்ட 16 வகையான பாதுகாப்பு அம்சம் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏதேனும் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால் அந்த வாகனங்கள் இயங்கு வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 135 பள்ளிகளைச் சேர்ந்த 511 வாகனங்கள் சோதனை நடத்தப்பட்டது. முன்னதாக பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் போது வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது, தீயை எப்படி அணைப்பது உள்ளிட்ட விளக்கங்கள் தீயணைப்பு துறை அலுவலர் வீரராஜ் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் செய்து காட்டினர்.

Updated On: 10 Jun 2022 10:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  4. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  6. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  7. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  8. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  9. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  10. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா