/* */

நெல்லை அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் தாெற்று சிகிச்சைக்கு தனி வார்டு

நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் தாெற்று சிகிச்சைக்கு 100 படுக்கைகள் வசதியுடன் கூடிய வார்டு தயார்.

HIGHLIGHTS

நெல்லை அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் தாெற்று சிகிச்சைக்கு தனி வார்டு
X

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெண்டிலேட்டர்/ ஆக்சிஜன் வசதியுடன்  ஒமைக்ரான் வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் வார்டு தயார். வெண்டிலேட்டர்/ ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. தினமும் 32 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜனை தயார் செய்யப்பட கூடிய வசதி இருப்பதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என தகவல்.

உலகம் முழுவதும் ஒமைகிரான் வைரஸ் பரவத் துவங்கியுள்ளது. 3வது நாடாக இந்தியாவிலும் ஒமைக்கிரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூர் வந்த பயணி ஒருவர் உள்ளிட்ட இருவருக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பு இல்லை என கூறப்பட்டாலும் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 1500 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 49 ஆயிரத்து 665 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 49 ஆயிரத்து 141 பேர் தொற்று நீங்கி குணமாகி வீடு திரும்பி சென்றனர். 433 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது 91 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சையில் உள்ளனர். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 6 நபர்கள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில் புதிதாக பரவி வரும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கும் விதமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது. வெண்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் இந்த படுக்கைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவும் என்பதை கடந்து எந்த வகையிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தற்போது வரை தெரியா விட்டாலும் சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் தயாராக உள்ளது.

வைரஸ் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2வது அலையின் போது ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக இருந்தது. ஸ்டெர்லைட் உள்ளிட்ட ஆலைகளில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது. தற்போது நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலேயே நாளொன்றுக்கு 32 ஆயிரம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அலகுகள் உள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு உச்சகட்டத்திற்கு சென்று ஆக்சிஜன் தேவை அதிகரித்தாலும் தட்டுப்பாடு ஏற்படாது. தேவைகேற்ப தனியார் மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் வழங்க முடியும் என தகவல் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

Updated On: 3 Dec 2021 12:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  3. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  4. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  5. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  6. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  9. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  10. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...