/* */

பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பெண் வன்கொடுமை கருத்தரங்கம்

பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பெண் வன்கொடுமையில் இருந்து எவ்வாறு எதிர் கொள்வது குறித்த கருத்தரங்கம்.

HIGHLIGHTS

பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பெண் வன்கொடுமை கருத்தரங்கம்
X

பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பெண் வன்கொடுமை தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.

அரசு அருங்காட்சியகத்தில் பெண் வன்கொடுமை தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.

நெல்லை அரசு அருங்காட்சியகமும், திருநெல்வேலி மாவட்ட சமூகநலத்துறை மற்றும் பிஎஸ்என் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கணினி துறையும் இணைந்து பெண் வன்கொடுமை தொடர்பான கருத்தரங்கினை நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடத்தினர்.

இக்கருத்தரங்கில் நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தலைமையுரை ஆற்றினார். பி.எஸ்.என். கல்லூரி கணினி துறை தலைவர் முனைவர். வர்கீஸ் மற்றும் பேராசிரியர் முனைவர். நல்லசிவன் வாழ்த்துரை வழங்கினார். திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறை பாதுகாப்பு அலுவலர் வனிதா பெண் வன்கொடுமை பற்றியும், அவற்றை எதிர்கொள்வது தொடர்பான சட்ட மசோதாக்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து சமூக நலத்துறையில் அளிக்கப்படும் திட்டங்கள் பற்றியும் மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். நிகழ்வில் பிஎஸ்என் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலை ஆசிரியை சொர்ணம் மற்றும் கவிஞர். சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Dec 2021 12:07 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்