/* */

குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீர்: அதிமுகவினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு

அண்ணாநகர் 36-வது வார்டு பகுதியில் குடியிருப்புகளை சுற்றியுள்ள மழைநீரை போர்க்கால அடிப்படையில் அகற்றக் கோரி அதிமுக சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீர்: அதிமுகவினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு
X

பாளையங்கோட்டை அண்ணா நகர் 36-வது வார்டு குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்றகோரி அதிமுக சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

பாளையங்கோட்டை அண்ணா நகர் 36-வது வார்டு குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்றகோரி அதிமுக சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

நெல்லை அதிமுக மாவட்ட கழக செயலாளரும், நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவருமான தச்சை-கணேசராஜா ஆலோசனையின் பேரில், பாளையங்கோட்டை தெற்கு பகுதி கழக செயலாளர் திருத்து சின்னத்துரை தலைமையில், வட்ட பொறுப்பாளர் சரவணன் ஏற்பாட்டில் பாளையங்கோட்டை 36 வது வார்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கும். போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அப்பகுதியில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மழைநீரை அகற்றும் படி மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரனிடம் மனு அளிக்கப்பட்டது. அப்போது தச்சை தெற்கு பகுதி கழக செயலாளர் சிந்து முருகன், நெல்லை மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் அம்மா தி கிரேட் சிவந்தி மகாராஜேந்திரன், ஆனந்தி மகாராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 1 Dec 2021 12:13 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!