/* */

காவல் துறையில் பணியின்போது வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பணியின்போது வீரமரணம் அடைந்தவர்களுக்கு 54 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது

HIGHLIGHTS

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி காவல்துறையில் பணி புரிந்து வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் திருநெல்வேலி மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் காவல் துறையில் பணிபுரிந்து வீரமரணம் அடைந்தோருக்கு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு உள்ள நினைவு தூணில் நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் செந்தாமரைக்கண்ணன், நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநவ், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சுரேஷ்குமார், நெல்லை மாநகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் சுரேஷ்குமார் மற்றும் நெல்லை மாநகர உதவி ஆணையர்கள் மற்றும் காவல் துறை ஆய்வாளர்கள் உள்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து 18 காவலர்கள் மூன்று முறை வானத்தை நோக்கி சுட்டு 54 குண்டுகள் முழங்க வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Oct 2021 7:38 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...