நெல்லை:பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலர்களின் குழந்தைகளுக்கு எஸ்பி மணிவண்ணன் பாராட்டு
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின் குழந்தைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பரிசுத்தொகை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.
2019-2020 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில், அரசால் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த பரிசுத் தொகையை, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் குழந்தைகளுக்கு வழங்கி பாராட்டுகளையும், வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் அவர்கள் குறிக்கோள்கள் வெற்றியடைவும், சிறந்த துறையை தேர்ந்தெடுத்து அதில் மென்மேலும் பல சாதனைகள் புரிய வேண்டும் என்று தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu