சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
X
14 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபருக்கு 7 வருட சிறை தண்டனைய\ விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

நெல்லையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு, 7 வருட காலம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கிய நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம்.

நெல்லை மாவட்டம்,கீழ நத்தம் மேலூரை சேர்ந்த முத்துசாமி மகன் வெள்ளத்துரை என்பவர், பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 2018 ம் ஆண்டு பாலியல் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு, நெல்லை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, நெல்லை டவுன் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் போரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் வெள்ளத்துரையை கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு, நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. இந்நிலையில், இவ்வழக்கை 01-10-2021-ம் தேதி விசாரித்த நெல்லை போக்சோ நீதிமன்ற நீதிபதி.அன்புச்செல்வி, குற்றம் சாட்டப்பட்ட வெள்ளத்துரைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Tags

Next Story
ai healthcare products