நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தின இணைய வழி சொற்பொழிவு

மாணவர்களின் ஆன்லைன் சொற்பொழிவு நிகழ்ச்சி.
நெல்லை அருங்காட்சியகத்தில் சுதந்திர தின இணையவழி தொடர் சொற்பொழிவு நடைபெற்றது.
நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றாக கல்வி வளர்ச்சி நாளான இன்று முதல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு சிறப்பு இணையவழி சொற்பொழிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நெல்லை அரசு அருங்காட்சியகம் துடன் இணைந்து மதுரை அரசு அருங்காட்சியகம், திருவாரூர் அரசு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்றுத் துறை, வேலூர், மதுரை அரசு கலைக்கல்லூரிகள் இணைந்து இந்த சொற்பொழிவினை நடத்துகின்றனர்.
இன்றைய துவக்க நிகழ்வில் நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சத்திய வள்ளி வரவேற்றுப்பேசினார்..
இந்திய சுதந்திர போராட்டத்தில் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு பற்றியும் விடுதலை போராட்ட வீரர்களின் அறியப்படாத தகவல்கள் பலவற்றை பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu