/* */

நெல்லை: ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 80 வயது மூதாட்டி மனு தாக்கல்

நெல்லை மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 80 வயது மூதாட்டி நேற்று மனு தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

நெல்லை: ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 80 வயது மூதாட்டி மனு தாக்கல்
X

நெல்லை மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 80 வயது மூதாட்டி நேற்று மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. 141 மாவட்ட கவுன்சிலர்கள், 1381 ஒன்றிய கவுன்சிலர்கள், 2900 ஊராட்சி மன்ற தலைவர்கள், 22 ஆயிரத்து 590 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என நான்கு பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நேற்று பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிவந்திபட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட பெருமாத்தா 80 வயது மூதாட்டி என்பவர் தன் ஆதரவாளர்களுடன் வந்து மனு தாக்கல் செய்தததை அதிகாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதேபோல் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆறாவது வார்டு கவுன்சிலர் பதவிக்காக. கே.எஸ் தங்கபாண்டியன் மனுதாக்கல் செய்தார்.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்ய ஏராளமானோர் கூடிய நிலையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் முகக்கவசங்கள் அணியுமாறும் திரண்டிருந்த மக்கள் மத்தியில் ேபாலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Updated On: 21 Sep 2021 7:06 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  7. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  9. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  10. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!