/* */

பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோவிலில் கார்த்திகை தீப விழா

பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோவிலில் கார்த்திகை தீப விழா
X

நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவிலில், தீப விழாவை முன்னிட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

தென்மாவட்டங்களில் பழமைவாய்ந்த வைணவ ஸ்தலங்களில் ஒன்றான நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், அதனைத் தொடர்ந்து உற்சவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

நேற்று மாலையில் சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி, தோளுக்கினியானில் எழுந்தருளி திருமங்கை ஆழ்வார் பிரபந்த பாராயணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருக்கோவில் பிரகாரம் முழுவதும், 1008 திருவிளக்குகள் கொண்டு தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் தோளுக்கினியான் பல்லக்கில் கார்த்திகை தீபத்தை உடன் ராஜகோபாலசுவாமி வீதி உலா வந்து, கோவில் முன்பு அமைக்கப்பட்ட சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ராஜகோபால சுவாமிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 19 Nov 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது