நெல்லையில் பல்வேறு கட்டுமானப்பணிகளை காவலர் வீட்டு வசதிக் கழக டி.ஜி.பி ஆய்வு

நெல்லையில் பல்வேறு கட்டுமானப்பணிகளை காவலர் வீட்டு வசதிக் கழக டி.ஜி.பி ஆய்வு
X

நெல்லையில் காவல்துறை வீட்டு வசதிக் கழகம் சார்பில் நடந்து வரும் பல்வேறு கட்டுமானப்பணிகளை டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு செய்தார்.

நெல்லையில் காவல்துறை வீட்டு வசதிக் கழகம் சார்பில் நடந்து வரும் பல்வேறு கட்டுமானப்பணிகளை டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு.

தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதிக் கழக டி.ஜி.பி., ஏ.கே.விஸ்வநாதன் நெல்லையில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து நெல்லையில் காவல்துறை வீட்டு வசதிக் கழகம் சார்பில் 8 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் பல்வேறு கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதிக் கழக டி.ஜி.பியான ஏ.கே.விஸ்வநாதன் நெல்லையில் மாநகர் மற்றும் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் நடந்து வரும் கட்டுமானப்பணிகள் குறித்தும், தேவையான வசதிகள் குறித்தும் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வைத்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை அருகில் 1 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பணிகள் முடிந்த காவல் நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மேடை போலீஸ்டேசன் செயல்பட்டு வந்த பழைய கோட்டையை பார்வையிட்டார். அதனை புனரமைத்து மக்கள் பார்வைக்கு கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் 7 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பில் ரேசன் கடை உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அமைய உள்ளது. அந்த பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக் கண்ணன், டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, எஸ்.பி., மணிவண்ணன், எஸ்.பி., கிருஷ்ணராஜ் (தென்காசி), போலீஸ் துணைக் கமிஷனர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?