/* */

நெல்லையில் பேருந்து படிக்கட்டில் தவறி விழுந்து கல்லூரி மாணவி படுகாயம்

நெல்லை பேருந்து கூட்ட நெரிசலில் சிக்கி படியில் தவறி விழுந்து கல்லூரி மாணவி படுகாயமடைந்தார்.

HIGHLIGHTS

நெல்லையில் பேருந்து படிக்கட்டில் தவறி விழுந்து கல்லூரி மாணவி படுகாயம்
X

பேருந்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த மாணவி நாகநாராயணி.

நெல்லை சாந்திநகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி நாகநாராயணி. இவர் பேட்டை மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் பி.காம் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

இவர் இன்று கல்லூரிக்கு செல்வதற்காக சாந்திநகர் வசந்த மகால் பஸ் நிறுத்தத்திலிருந்து பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் உள்ளே செல்ல முடியாமல் படிக்கட்டில் பயணம் செய்யும் போது தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நெல்லையில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் செல்லும் பேருந்துகளில் இடமில்லாமல் படியிலேயே தொங்கியபடி தொடர்ந்து இருந்து வந்த நிலையில் இன்று இந்த மாணவி கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Updated On: 30 April 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!