/* */

மாநகர் சைபர் பிரிவு போலீஸாரால் மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

நெல்லை மாநகரில் காணாமல் போன 33 லட்சம் மதிப்புள்ள 233 செல்போன்களும், இணைய மோசடி செய்யப்பட்ட 26.73 லட்சம் பணமும் ஒப்படைக்கப்பட்டது

HIGHLIGHTS

மாநகர் சைபர் பிரிவு போலீஸாரால்  மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
X

நெல்லை மாநகர் சைபர் பிரிவு போலீஸாரால் மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

நெல்லையில் இணையதளம் மூலம் மோசடி செய்யப்பட்ட 26.73 லட்சம் பணம் மீட்கப்பட்டு உரியவர்களின் வங்கி கணக்கில் திரும்ப ஒப்படைப்பு. வட இந்தியர்கள் தான் பெரும்பாலும் இணையக் குற்றத்தில் ஈடுபடுகிறார்கள் அவர்களை பிடிக்க விரைவில் சிறப்பு குழுக்கள் அனுப்பப்படும் என நெல்லை மாநகர காவல் ஆணையர் துரைக்குமார் தெரிவித்தார்.

நெல்லை மாநகரில் காணாமல் போன செல்போன்கள் மாநகர சைபர் பிரிவு போலீசார் மூலம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் அந்த செல்போன்களை ஒப்படைக்கும் நிகழ்வு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநகர காவல் ஆணையர் துரைக் குமார், துணை ஆணையர்கள் சுரேஷ்குமார்( கிழக்கு,) சுரேஷ்குமார் ( மேற்கு ) ஆகியோர் கலந்துகொண்டு மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இணையதளம் மோசடிக்குள்ளாகி வங்கி கணக்கில் இருந்து பணத்தை இழந்த நபர்களுக்கு பணத்தை மீட்டு உரியவரிடம் காவல் ஆணையர் ஒப்படைத்தார். அதன்படி இன்று 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 233 செல்போன்களும், இணைய மோசடி செய்யப்பட்ட 26 லட்சத்து 73 ஆயிரத்து 458 ரூபாய் பணமும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் துரைக் குமார் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், நெல்லையில் காணாமல் போன 33 லட்சத்து 5 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள 233 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இணையதளம் மூலமாக வேலை வாங்கி தருவதாகவும், பரிசுப்பொருட்கள் விழுந்திருப்பதாகவும் குறுஞ்செய்தி மூலம் ஓடிபி பெற்று பண மோசடி செய்த இணையதள குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பணம் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. மோசடி கும்பலின் வங்கிக் கணக்குகளை முடக்கி ஒட்டு மொத்தமாக 26 லட்சத்து 73 ஆயிரத்து 458 ரூபாய் மீட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் இணையக்குற்றம் அதிகரித்து வருகின்றது. அதை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணைய பண மோசடி குற்றம் கண்டறியப்பட்டால் 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இணைய வழியான பண மோசடியில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் வடமாநிலத்தவர்களாக இருக்கின்றனர். தமிழகத்தில் இணையகுற்றத்தில் ஈடுபடுபவர்கள் மிக குறைவு. மோசடிக்கு பயண்படுத்தப்படும் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் பெரும்பாலும் போலியான முகவரிகளை கொடுத்துள்ளனர்.

குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களை கண்டறிந்து கைது செய்ய வட மாநிலத்திற்கு சிறப்பு குழுக்கள் விரைவில் அனுப்பபட்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் விளையாட்டுகள் மூலமாக பணத்தை இழக்கும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும் மாநகரில் போக்குவரத்தை சரிசெய்யவும், காவலர்கள் பற்றாக்குறையை சரிசெய்யவும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று காவல் ஆணையர் துரைக்குமார் தெரிவித்தார்

அதேபோல் நெல்லையை சேர்ந்த ஜெயராஜ் தவமணியை அவரது நண்பரே ஏமாற்றி ஜெயராஜ் தவமணியின் செல்போன் வாங்கி அதன் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்த 22 லட்சம் பணத்தை நண்பர் தனது வங்கி கணக்கி மாற்றியுள்ளார் போலீசார் விரைந்து செயல்பட்டு ஜெயராஜ் தவமணியின் பணத்தை மொத்தமா மீட்டு கொடுத்துள்ளதால் இன்ப அதிர்ச்சி அடைந்த தவமணி, எனது பணம் திரும்ப கிடைக்கும் என நினைத்து கூட பார்க்கவில்லை எனவே நெல்லை மாநகர காவல் துறைக்கு நன்றி என உணர்ச்சிப்பூர்வமாக .தெரிவித்தார்.

Updated On: 3 March 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஜப்பானில் பரவும் சதை உண்ணும் பாக்டீரியாக்கள்! இரண்டு நாட்களில்...
  2. Trending Today News
    காற்றில் டைவ் அடித்த திமிங்கலம்..! வீடியோ வைரல்..! (செய்திக்குள்...
  3. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42.63 அடியாக சரிவு
  4. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டியில் யோகாசனம் செய்து நோவா உலக சாதனை
  5. ஈரோடு
    பவானி அருகே ஆம்னி காரில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர்
  6. நாமக்கல்
    நாமக்கல் வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மண்டை ஓடுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த காரால்...
  8. ஈரோடு
    6 மாதத்தில் பிறந்த அரை கிலோ குழந்தை.. தீவிர சிகிச்சையில் 6 கிலோவாக...
  9. திருவள்ளூர்
    நிலத்தை தருவதாக ரூ.25 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர் எஸ்.பி.,யிடம்...
  10. ஈரோடு
    திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டி பேசிய மாவட்ட முதன்மை நீதிபதி