/* */

நெல்லை ஆடிப்பெருக்கு விழா : பெண்கள் ஆற்றங்கரையில் சிறப்பு வழிபாடு

நெல்லை,தாமிரபரணி ஆற்றுப் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பெண்கள் மாங்கல்ய பூஜை,சிறப்பு வழிபாடு செய்தனர்.

HIGHLIGHTS

நெல்லை ஆடிப்பெருக்கு விழா : பெண்கள் ஆற்றங்கரையில் சிறப்பு வழிபாடு
X

ஆடிப்பெருக்கையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில் வழிபாடு செய்யும் பெண்கள்.

ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு அம்மனுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் போற்றப்படுகிறது. நெல்லை தாமிரபரணி ஆற்றில் இன்று ஆடிப்பெருக்கு விழா நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்படுகிறது. திருச்சி காவிரியில் கொண்டாடுவதைப் போல திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு ஓடும் முக்கிய இடங்களில் ஆடிப்பெருக்கு விழா நடப்பது வழக்கம்.

நெல்லை வண்ணார்பேட்டை பேராத்து அம்மன் கோவில் தாமிரபரணி ஆற்று படித்துறையில் இன்று காலை பெண்கள் சிறப்பு பூஜை நடத்தினர். திருமணம் ஆகாத பெண்கள் விரைவில் தாலி பாக்கியம் கிடைக்கவும், சுமங்கலி பெண்கள் தாலி பாக்கியம் நீடிக்கவும் சிறப்பு பூஜை நடத்தினர். முன்னதாக தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி பூஜையை தொடங்கினர். பெண்கள் தாலியில் மஞ்சள் தடவினர். சில பெண்கள் புதிதாக மஞ்சள் கயிறு அணிந்தனர்.

பின்னர் வெற்றிலையில் மஞ்சள், குங்குமம், பூ, சந்தனம் வைத்து கற்பூரம் ஏற்றி தாமிரபரணி ஆற்றை வழிபட்டனர். ஆடிப்பெருக்கையொட்டி வண்ணார்பேட்டை பேராத்து அம்மன் கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

தற்போது கொரோனா 3வது அலை பரவும் அபாயம் உள்ளதால் அங்கு அதிக பெண்களை கூட விடாமல் போலீசார் வெளியேறச் செய்தனர்.

Updated On: 3 Aug 2021 7:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  4. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  5. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  7. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  8. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  9. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  10. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு