/* */

ஒரு இஸ்லாமியர் இல்லை.. கிராமமே கொண்டாடிய இஸ்லாமிய விழா!

இஸ்லாமியர்களே இல்லாத கிராமத்தில் நடைபெற்ற இஸ்லாமிய விழா திருநெல்வேலி அருகே சுவாரஸ்ய நிகழ்ச்சி

HIGHLIGHTS

ஒரு இஸ்லாமியர் இல்லை.. கிராமமே கொண்டாடிய இஸ்லாமிய விழா!
X

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள தெற்கு விஜயநாராயணம் மேத்தபிள்ளையப்பா தர்காவில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்தக்காட்டாக வருடந்தோறும் நடைபெற்று வரும் கந்தூரிவிழா நேற்று நடைபெற்றது.

விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் இந்த விழா வருடந்தோறும் ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக இஸ்லாமிய விழாக்கள் பிறையைக் கொண்டே கணக்கிடப்படும். ஆனால் இந்த தர்கா கந்தூரி விழா பிறையைக் கணக்கில் கொள்ளாமல் ஆடி மாதம் 16ம் தேதி நடைபெறுவது வழக்கம்.

அதேபோல இந்த ஊரில் ஒரு இஸ்லாமிய குடும்பம் கூட கிடையாது. ஆனால் தமிழகம் எங்குமிருந்து வரும் இஸ்லாமியர்களுக்கு தங்கள் தாய்பிள்ளைகளாக இங்குள்ள கிராமத்தினரே அவர்களுக்கு தங்க இடம் கொடுத்து, பாதுகாப்பும் உணவும் கொடுக்கிறார்கள். அவர்களே விழாவை முன்னின்று நடத்துகிறார்கள்.

நேற்று நடந்த தர்கா கந்தூரி விழாவில் மேத்த பிள்ளையப்பா வாழ்ந்ததாக கூறப்படும் வீட்டில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டது. இதில் திரளான இஸ்லாமியர்கள் நாரே தகுபீர் அல்லாகு அக்பர் என பக்தி கோஷமிட்டு ஊர்வலமாக தர்காவுக்கு வந்து சேர்ந்தனர். பின் தர்காவில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு துவா ஓதப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி கேரளா மற்றும் பிற மாநிலங்களிலுமிருந்து திரளான இஸ்லாமியர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

Updated On: 2 Aug 2023 5:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...